தமிழ்நாடு - அஞ்சல் துறையில் தபால்காரர் /அஞ்சல் காவலர் பணியிடங்கள் Post Office Vacancy Notification Vacancies - 318 Last Date: 20.10.2021 - Education murasu

Latest

Sunday, October 10, 2021

தமிழ்நாடு - அஞ்சல் துறையில் தபால்காரர் /அஞ்சல் காவலர் பணியிடங்கள் Post Office Vacancy Notification Vacancies - 318 Last Date: 20.10.2021

 தமிழ்நாடு - அஞ்சல் துறையில் தபால்காரர் /அஞ்சல் காவலர் பணியிடங்கள் - 318 Vacancies   Last Date: 20.10.2021  



அஞ்சல் துறையிலிருந்து காலியாக உள்ள தபால்காரர் /அஞ்சல் காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.  


நிறுவனம்: அஞ்சல் துறை  


 பணியின் பெயர்: தபால்காரர் /அஞ்சல் காவலர் 


  மொத்த பணியிடங்கள்: 318 


 தகுதி: தபால்காரர் / அஞ்சல் காவலர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


 வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பில், குறிப்பிட்ட பிரிவினருக்கான வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, அனைத்து பிரிவினருக்கும் 01.01.2021ன்படி அதிகபட்ச வயது வரம்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், UR பிரிவினருக்கு அதிகபட்சம் 50, OBC பிரிவினருக்கு அதிகபட்சம் 53, SC/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  


தேர்வு செயல்முறை: சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 தாள்கள் அடங்கிய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 20.10.2021குள் அனுப்பி வைக்க வேண்டும்.  


விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2021


  Notification for அஞ்சல் துறை 2021:Click Here       


Official Site: Click Here

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.